சமீபத்தில் என்னுடைய ரசிகை ஒருவருடன் சேட் செய்து கொண்டிருக்கும்போது, அவர் சொன்ன ஒரு வாக்கியந்தான் இந்தக்கதைக்கு ஆரம்பப்புள்ளி. இந்தக்கதை உருவாகக் காரணமாயிருந்த அந்த ரசிகைக்கு இந்த சமயத்தில் ஒரு நன்றி சொல்லிக் கொள்கிறேன். நன்றி ரசிகையே ..!! துருதுருவென, சற்றே வெகுளியான, முக்கியமாய் அழகான.. ஒரு கல்லூரிப்பெண்ணை யாருக்குத்தான் பிடிக்காது..? அந்த மாதிரி ஒரு பெண்தான் இந்த கதையின் நாயகி..!! கொஞ்சம் இம்சை பிடித்தவள் என்று கூட அவளை சொல்லலாம்..!! எல்லாவற்றையும் விட அவளிடம் இன்னுமொரு குணம் கூட இருக்கிறது.. அதுதான் இந்தக்கதையின் ஹைலைட்..!! அப்புறம்.. அந்த வாசகி சொன்ன அந்த வாக்கியம்.. “பொய் பொய்யா சொல்றடா.. புழுகு மூட்டை..!!” கதையை படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை எனக்கு சொல்லுங்கள். நன்றி..!! – ஸ்க்ரூட்ரைவர்
கதீட்ரல் ரோட்டில் இருந்து உள்ளே செல்லும் ஒரு குறுகிய சாலையில், எழுபத்தைந்து சதவிகிதம் முடிவடைந்த நிலையில் நின்றிருக்கிறது அந்த கட்டிடம். எட்டு தளங்கள் கொண்ட பிரம்மாண்டமான கட்டிடம். ஏழாயிரம் பேர் வசதியாக அமர்ந்து வேலை பார்க்க கூடிய கொள்ளளவு. பகல், இரவு என முழு வீச்சில் வேலை நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் மூன்று மாதங்களில், ஒரு பெரிய சாப்ட்வேர் கம்பெனியின் ஒரு யூனிட் அங்கு வந்து குடியேற போகிறது.
அந்த கட்டிடத்தின் மொட்டை மாடியில், மாலை வெயிலுக்கு கண்களை சுருக்கியவாறு நான் நின்றிருந்தேன். கட்டிடத்தின் ஒரு ஓரத்தில் இருந்த அந்த பெரிய பிரமிட் வடிவ ஸ்ட்ரக்சரின், ஸ்லோப் அளவை நான் சரிபார்த்துக் கொண்டிருந்தேன். என்னுடைய ஒரு கையில் ரச மட்டம், இன்னொரு கையில் டேப்..!! பிரமிட் உச்சியில் சரியாக இருந்த அளவு, கீழே வர வர, டிராயிங்கில் இருப்பதை விட அரை இன்ச் அளவு குறைந்தது. அருகில் வெல்டிங் அடித்துக் கொண்டிருந்த பையனிடம் நான் எரிச்சலாக கத்தினேன்.
“டேய்.. மேஸ்திரியை எங்கடா..?”
“டீ சாப்பிட போயிருக்கார்ண்ணா..”
“மட்டம் கரெக்டா இல்லைடா.. அரை இன்ச் கம்மியாவுது..”
“நான் அப்போவே சொன்னேண்ணா.. அவுரு கேக்கலை.. பரவால்ல வுடுன்னாரு..”
“ப்ச்.. என்னடா நீங்க..!! இந்த சின்ன வேலையை இப்படி சொதப்புறீங்க..!! எப்ப வருவாரு..?”
“தோ.. அஞ்சு நிமிஷம்ண்ணா.. வந்துருவாரு..”
நான் அந்த பிரமிடையே கொஞ்ச நேரம் எரிச்சலாக பார்த்தேன். அப்புறம் அமைதியாக நடந்து சென்று, இன்னும் பூசி முடிக்கப்படாத அந்த பேராபெட் சுவரில் சென்று அமர்ந்தேன். கான்க்ரீட் கற்கள் என் புட்டத்தை குத்துவதை கண்டுகொள்ளவில்லை. கதீட்ரல் ரோட்டில் வேகமாய் ஓடிய வாகனங்கள் மீது பார்வையை வீசினேன். நூறு அடி உயரத்தில் மேலே அமர்ந்து, சென்னையின் ஆரவாரத்தை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டே, மேஸ்திரிக்காக காத்திருந்தேன்.
நான் அசோக். பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். ஆறு ஆண்டுகளுக்கு முன், ஹைதராபாத்தில் உள்ள ஒரு காலேஜில் B.Arch முடித்தேன். இரண்டாண்டுகளுக்கு முன்பு தனியாக பிசினஸ் ஆரம்பித்தேன். இந்தக் கட்டிடத்தின் ஒரு சில வேலைகள் மட்டும் எனக்கு காண்ட்ராக்ட் விடப்பட்டிருக்கின்றன. ஆஹா ஓஹோ என போகாவிட்டாலும், ஓரளவு ஓகே என்று சொல்லுமளவிற்கு போனது பிஸினஸ்..!! இந்த இரண்டு ஆண்டுகளில் உருப்படியாய் ஏதாவது சம்பாதித்திருக்கிறேன் என்றால், அது.. அதோ.. கீழே மரநிழலில் நிற்கிறதே.. என்னுடைய ரெட் கலர் ஸ்விஃப்ட்..!! அதுதான்..!!
ஒரு பத்து நிமிடத்தில் மொட்டை மாடி திறப்பு வழியாக வெளிப்பட்டார் கடற்கரை. மேஸ்திரி..!! உடன் நடந்து வந்த இன்னொருத்தனிடம், அவனுடைய மனைவியை கெட்ட வார்த்தை சொல்லி திட்டியபடி வந்தவர், என்னை பார்த்ததும் அமைதியானார். வாயில் புகைந்து கொண்டிருந்த பீடியை கீழே போட்டு வெற்றுக் காலால் மிதித்து அணைத்தார். மடித்துக் கட்டியிருந்த வேஷ்டியை இறக்கிவிட்டார். முகத்தில் சிரிப்பை வரவைத்துக் கொண்டபடி நக்கலாக சொன்னார்.
“இன்னா சார்.. அங்க போய் குந்தினுக்குற..? வுழுந்துறப் போற.. இந்தாண்ட வா..!!”
“ப்ச்..!! நக்கலுக்கு ஒன்னும் கொறைச்சல் இல்லை உனக்கு..!! வேலைல மட்டும் கோட்டை வுட்டுடு..!!” சொல்லிக்கொண்டே நான் எழுந்து அவரை நோக்கி நடந்தேன்.
“இன்னாயிப் போச்சு இப்போ..? வேலைல இன்னா கொறை கண்டுக்கின நீ..?” கடற்கரையின் குரலில் இப்போது ஒரு சீரியஸ்னஸ் வந்திருந்தது.
“அந்த பிரமிட் மட்டம் சரியில்லை.. அரை இன்ச் டிஃபரன்ஸ் வருது..!!”
“ஹே.. அரை இன்ச்தான சார்..? சும்மா வுடு.. ஒன்னும் ஆவாது..!!”
“ப்ச்.. புரியாமப் பேசாத கடக்கரை.. அது மேல க்ளாஸ் வருது.. அரை இன்ச் டிஃபரன்ஸ் இருந்தா.. க்ளாஸ் உக்காராது..!!”
“க்ளாசா..? இதுல போய் இன்னாத்துக்கு க்ளாஸ் போடுறானுங்கோ.. அறிவு கெட்டவனுங்கோ..!!” கிண்டலாக சொன்ன கடற்கரையை நான் முறைத்துப் பார்த்தேன். அதை உணர்ந்ததும் அவர் கொஞ்சம் கம்மலான குரலில் கேட்டார்.
“இன்னா சார்..?”
“அந்த க்ளாஸ் போடுற ஐடியா நான் சொன்னது…!!”
“ஓ.. உன் ஐடியாதானா..? இன்னாத்துக்கு க்ளாஸ்லாம் போடுற இதுல நீ..?”
“ப்ச்.. அதுலாம் உனக்கு சொல்லி புரிய வைக்க முடியாது கடக்கரை.. இந்த மாதிரி ஏதாவது வேலை பண்றதுக்குத்தான் எனக்கு பணம் தர்றாங்க.. நான் சொல்ற வேலையை மட்டும் செய்.. போதும்..!!”
“சரி வுடு.. பண்ணிர்லாம் வுடு..”
“எப்போ..?”
“அதான் பண்ணிர்லாம்னு சொல்றேன்ல..?”
“இப்போ பண்ணு.. இன்னைக்கு நான் உக்காந்து பாத்துட்டுத்தான் போறேன்..” நான் சீரியஸாக சொல்லிக் கொண்டிருக்க, கடற்கரை சிரித்தார்.
“எதுக்கு சிரிக்கிற இப்போ..?” நான் சற்றே எரிச்சலாக கேட்டேன்.
“நான் பண்றேன்.. ஆனா பாக்கத்தான் நீ இருக்கமாட்ட..”
“ஏன்..?”
“அங்க பாரு.. பாப்பா வந்தினுகிது..”
கடற்கரை கை நீட்டிய திசையில், தூரமாய் நான் பார்வையை வீசினேன். கதீட்ரல் ரோடிலிருந்து பிரிந்து வந்த சாலையில், ஸ்கூட்டி ஓட்டிக் கொண்டு கவி வருவது தெரிந்தது. இந்தக்கதையின் ஹீரோயின்..!! மிதமான வேகத்தில் வந்தவள், எங்கள் பில்டிங்கை அடைந்ததும், வண்டியை நிறுத்தி ஸ்டாண்ட் போட்டாள். நான் திரும்பி கடற்கரையை பார்க்க, இப்போது அவர் முகத்தில் ஒரு கேலிப்புன்னகை.
“இன்னா.. இப்போ உக்காந்து வேலையை இருந்து பாத்துனு போறியா..?” அவர் கிண்டலாக கேட்க, நான் ஒரு அசட்டுப் புன்னகையை சிந்தினேன்.
“வேலையை முடிச்சிடு கடக்கரை.. நான் காலைல வந்து பாக்குறேன்..”
“ஒன்னும் கவலைப்படாத.. போயினு காலைல வா.. வேலை முடிஞ்சிருக்கும்..”
அவர் என் முதுகை பார்த்து சொல்ல, நான் என் லேப்டாப் பேக்கை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டேன். படிக்கட்டில் இறங்கிக்கொண்டே, செல்போன் எடுத்து கவியின் நம்பரை தட்டினேன். கால் பிக்கப் செய்யப்பட்டு நான் ஹலோ சொல்வதற்கு முன்பே, எதிர் முனையில் கவி சோகமான குரலில் கொஞ்சலாக சொன்னாள்.
“அசோக்… இப்போதான் வீட்டுக்குள்ளயே நொழையுறேன்டா செல்லம்.. ரொம்ப லேட் ஆயிடுச்சு.. டயர்டா வேற இருக்கு.. என்னால அங்க வர முடியாதுன்னு நெனைக்கிறேன்.. நாம நாளைக்கு மீட் பண்ணலாமா..? ம்ம்..? ஓகேவா..?”
அவள் குழைவான குரலில் கெஞ்சிக்கொண்டிருக்க, நான் பதில் சொல்லாமல் காதுக்கு கொடுத்திருந்த செல்போனை, கடுப்புடன் கையில் எடுத்து பார்த்தேன். டிஸ்ப்ளேயில் வெண்பற்கள் தெரிய சிரித்துக் கொண்டிருந்த கவியின் முகத்தை சற்றே எரிச்சலாய் முறைத்தேன். ‘ஆரம்பிச்சுட்டியா..????’ என்று மனதுக்குள் முணுமுணுத்தேன். அப்புறம் மறுபடியும் செல்போனை காதுக்கு கொடுத்து,
“லூசு..!!!! நீ வந்ததை.. மேல இருந்து நான் பாத்துட்டேன்..!!” என்றேன் எரிச்சலை அடக்கிக்கொண்டு.
“ஓ.. பாத்துட்டியா..? ச்ச்சே.. திடீர்னு உன் முன்னாடி வந்து நின்னு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு நெனச்சேன்.. எல்லாம் போச்சு..!!” இப்போது அவளது குரல் சோகம் விடுத்து ஏமாற்றமாய் ஒலித்தது.
“ம்ம்ம்.. அதுசரி.. என்ன.. அஞ்சு மணிக்குலாம் வந்து நிக்கிற..? ஆறு மணிக்குத்தான் வருவேன்னு சொன்ன..”
“ஹஹா.. அது சும்மா பொய் சொன்னேன்..”
“எதெதுக்குத்தான் பொய் சொல்றதுன்னு ஒரு வெவஸ்தையே இல்லையா உனக்கு..?” நான் சற்றே கோபமான குரலில் கேட்க,
“சரிசரி.. ஆரம்பிச்சுடாத.. இனிமே பொய் சொல்லலை.. போதுமா..?” அவள் என்னை சாந்தப் படுத்தினாள்.
“சரி கீழேயே இரு.. வர்றேன்..”
“பரவால்ல அசோக்.. மேல வர்றேன்..”
“ப்ச்.. தேவையில்லாம எதுக்கு எட்டு மாடி ஏறுற..? நான் கால் பண்ணினதே அதுக்குத்தான்.. கீழேயே வெயிட் பண்ணு.. வந்துக்கிட்டே இருக்குறேன்..!!”
சொல்லிவிட்டு நான் காலை கட் செய்தேன். பக்கவாட்டில் கைப்பிடி இல்லாத.. முழுதாய் இன்னும் பூசி முடிக்கப் படாத படிகளில், பொறுமையாக கவனமாக இறங்கினேன். இன்னும் எட்டு மாடிகள் இறங்க வேண்டும். அதற்குள் கீழே எனக்காக காத்திருக்கும் கவியை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.
கதையின் தொடர்ச்சி அடுத்த பக்கத்தில் … உங்கள் கருத்துக்களை கீழே மறக்காமல் comment பண்ணவும் .
கவிதைக்கு பொய் அழகு..!! – Tamil Kmamakathai Love and sex
மாய உலகம் ( அமானுஷ்யம் கலந்த இன்செஸ்ட் காம கதை ) - Page 3 of 4
நண்பனின் மனைவி அந்தரங்கம் உடன் கள்ள ஓல் கதை
அத்தை மடி எனக்கு மெத்தைதான். - Page 2 of 2
ப்ளீஸ் டா, என்ன ஒன்னும் பன்னாதீங்க டா 5 - இறுதி பகுதி - Page 3 of 5
மீள முடியா பாதையில் மாட்டிக்கொண்ட Jodiகள் - Page 2 of 2
என் மனைவி வேறு பலருடன் படுத்த கதை… | 03
என் மனைவி
எம்பேரு சுஜி
ஹேமா சித்தி - Page 3 of 6
அழகு கூதி ஆர்த்தி – 1
ஆட்டுவது தான் வேலை
முடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 5