இடியா விழுந்தது? இதயம் பிளந்ததா? உயிர் ஒழுகிப் போனதா? ஜீவனை இழந்த என் கண்கள் இனி என்னவனைக் காணாதோ? நீ கட்டியத் தாலியை நான் கழட்டிய நேரம் எமன் வந்துவிட்டானோ? என்னால் தானே சேது? நீ இல்லாமல் போனது என்னால் தானே சேது?’ கத்தக் கூடத் தோன்றாமல் அப்படியே ஸ்தம்பித்தாள் ஜான்சி….
பேச்சின்றிப் போன மகளுக்கு மூச்சு இருக்கிறதா என்று பயந்தவள் போல் தலையைத் தூக்கி மகளைப் பார்த்து “ஜான்சி… ஜான்சி” என்று அழைத்தும் பதிலில்லாமல் அவள் நிலையின்றி வெறிக்க…. பட் பட்டென்று கன்னத்தில் அறைந்து “ஏய் ஜான்சி” என்று அதட்டியதும் உயிர் வந்தது போல் சிலிர்த்துக் கொண்டாள்….
தாயின் வார்த்தையால் நெஞ்சம் பிளவாகிப் போனதில் நெடுந்துயர் கொண்ட ஜான்சி நீண்ட குரலெடுத்து “அய்யோ சேது… என்னை விட்டுட்டுப் போய்ட்டியா?” என்று கத்தியக் கத்தலில் அந்த கட்டிடமே அதிர்ந்து குலுங்கியது….
மகளின் கூக்குரல் கேட்டு மாடியேறி வந்தார் நல்லு….
அப்பனைக் கண்டதும் அழுது கொண்டிருந்தவள் கட்டிலில் இருந்து தாவி இறங்கினாள்… பத்திரகாளியாய் எதிரில் வந்து நின்று அவர் சட்டையைப் பிடித்து “அடப்பாவி என் புருஷனைக் கொன்னுட்டியா? எங்களை விட்டிருந்தா எங்காவதுப் போய் பிச்சையெடுத்தாவது பொழிச்சிருப்போமே…. இப்புடி அநியாயமா கொன்னுட்டியேடா பாவி” என்று கத்தியவளை “என்னடி ஓடுகாலி நாயே மரியாதை குறையுது?” என்று ஒரு அறைவிட்டு அலட்சியமாக உதறித் தள்ளினார்…
“அவன் விதி போய்ச் சேர்ந்துட்டான்…. ஒப்பாரி வைக்காம ஒழுங்கா இருக்கிற வழியைப் பாரு…. இல்லேன்னு வை… அவன் கூட இன்னும் ரெண்டு பேர் இருந்தானுங்களே? அவனுங்களையும் சத்தமில்லாம போட்டுத் தள்ளிடுவேன்” என்ற மிரட்டலுடன் அறையைவிட்டு வெளியேறினார்….
தரையில் சுருண்டு கிடந்தவளின் அருகே வந்து அமர்ந்து “அழாதம்மா” என்று மகளைத் தூக்கி மடியில் கிடத்தினாள் கஸ்தூரி…
“நான் பாவிம்மா…. அவரை விரட்டி விரட்ட காதலிச்சு கல்யாணத்துக்கும் வற்புறுத்தி கடைசில என்னாலேயே சாவும் வந்துடுச்சே?…. நான் அவர் லைப்ல வரலைன்னா அவர் ப்ரண்ட்ஸ் கூட சந்தோஷமா இருந்திருப்பாரே?” என்று சொல்லிச் சொல்லி அழுதவள் ஒரு கட்டத்தில் அழவும் முடியாமல் மயங்கி சரிந்தாள்…..
” வானம் கருத்திருக்கு….
” வட்டநிலா வாடிருக்கு….
” ஏங்கி ஏங்கி அழுகிறேனே….
” என்னவனே எங்கேப் போனாய்?
” கரும் மேகம் கூடியிருக்கு…
” நிலவு அதில் மறைஞ்சிருக்கு…
” மேகம் கலைந்ததும் நிலவாக….
” நீ தெரிவாயா கண்ணா?
” உயிரின் உயிரை…..
” இழக்கும் வலி…
” காதலில் மட்டுமில்லை…
” நட்பிலும் உயிர்வதை தான்!!
கதறலும் நின்று கண்ணீரும் நின்று காய்ந்து போன சருகாக….. அன்பு கொண்டவனை இழந்து ஆதரவின்றி கிடந்த மகளைப் பார்த்து பெற்ற வயிறு வெறுமையில் துடித்தது…. மகளை விட்டு அகலாமல் அமர்ந்திருந்தாள்…
கணவனும் இளைய மகளும் இணைந்து மூத்தவளுக்கு இழைத்த அநீதி கண்டும் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் கோழையாக இருப்பது இன்னும் கொடும் வலியாக இருந்தது….
ஒன்றும் புரியமால் அமர்ந்திருந்தவளுக்கு மான்சி வரும் சேதி கிடைத்ததும் இன்னும் அதிர்வு அதிகமானது… இன்னும் ஏதாவது பாக்கி வைத்திருக்கிறாளோ? என்ற எண்ணத்துடன் காத்திருந்தாள்…
மான்சி வந்தாள்… கார் கதவைத் திறந்து அதே மதர்ப்பு;டன் திமிராக இறங்கியவள்… விரலைச் சொடுக்கி வாட்ச்மேனை அழைத்தாள்….
பணிவுடன் வந்து வாய் பொத்தி நின்றவரின் தாடையில் தனது கை விரல்களை பதித்து விட்டு “ஹாரன் சத்தம் கேட்டதுமே கேட்டைத் திறக்காம எங்கடா போன” என்று கோபமாக கேட்கவும்.
“இல்லைம்மா…. நாய்களுக்கு சாப்பாடுக் கொடுக்கப் போய்ட்டேன்” என்று அத்தனை பேரின் முன்பு அறை வாங்கிய அவமானத்தில் குறுகிப் போய் நின்றிருந்தார்…
“நாய்க்கு சாப்பாடு குடுக்கப் போனியா? இல்ல நீ கொட்டிக்கப் போனியா?… இனி என் கார் ஹாரன் சத்தம் கேட்டவுடன்யே கேட்டைத் திறந்து ரெடியா வச்சிருக்கனும்” என்று எச்சரிக்கை செய்துவிட்டு வீட்டுக்குள் வந்த மகளைப் பெருமையுடன் பார்த்தார் நல்லு…..
தகப்பனை ஆத்திரமாகப் பார்த்தவள் “நாய்களை கவனிக்க தனியா இன்னொரு ஒரு நாயை அப்பாய்ன்ட் பண்ணுங்க டாடி… கேட் திறக்க த்ரீ மினிட்ஸ் லேட்” என்று முழங்கிவிட்டு தனது அறைக்கு செல்ல மாடியேறவும்…. அவள் பின்னாலேயே நல்லுவும் ஓடினார்…
“மன்னிச்சுக்கோ பாப்பா…. முதல் வேலையா ஒரு ஆளைப் போடுறேன்” என்று மூச்சு வாங்க பேசியவரை அலட்சியமாகப் பார்த்து “நான் ரெஸ்ட் எடுக்கனும்… அப்புறமா பேசலாம்” என்று கூறிவிட்டு அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்தினாள்…
“பாப்பா ஏதாவது சாப்ட்டு…..” என்று அவர் சொல்லி முடிக்கும் முன் கதவு முகத்தில் அறைவது போல் மூடப்பட்டது….. மூடியக் கதவையேப் பார்த்துவிட்டு “ரொம்ப தூரம் கார் ஓடிக்கிட்டு வந்த களைப்பா இருக்கும்… ரெஸ்ட் எடுக்கட்டும்… பிறகு பார்க்கலாம்” என்று தனக்குத் தானேச் சொல்லிக் கொண்டு கீழே இறங்கினார்….
மதியம் ஒரு மணிக்குச் சென்று படுத்Ī0;வள் மாலை ஆறு மணி வாக்கில் ஜான்சியின் அலறல் கேட்டு திடுக்கிட்டு எழுந்தாள்….
இருக்கும் இடம் புரிந்து எழுந்தவள்.. இன்டர்காமில் காபி எடுத்து வரும்படிக் கூறிவிட்டு… முகம் கழுவிக்கொண்டு வந்தாள்….
காபி எடுத்து வந்தது நல்லு தான்… வாங்கிக் கொண்டவள் “என்ன டாடி நீங்க எடுத்துட்டு வர்றீங்க?” என்றபடி சோபாவில் உட்கார… எதிரில் அமர்ந்தவர் “உன்கிட்ட பேசனும் பாப்பா… அதான் நானே வந்தேன்” என்றார்….
மிடறு மிடறாக ரசனையோடு காபியை குடித்தவள் “சொல்லுங்க டாடி” என்றாள்…
“பத்து நாள் ஆகும்னு சொல்லிட்டு சீக்கிரமே வந்துட்டியே பாப்பா? ஊட்டில வசதி பத்தலையா?”
காபி கப்பை டீபாயில் வைத்து விட்டு “ப்ரெண்டோட எஸ்டேட்ல தங்கி படிக்கிறதுனு போனோம்…. அங்கப் பார்த்தா அவளோட ரிலேஷன்ஸ் எல்லாரும் வந்துட்டு ஒரே கூட்டம்…. எனக்குப் பிடிக்கலை… அதான் கிளம்பி வந்துட்டேன்…. நாளைக்கு நைட் சென்னை கிளம்பிடுவேன்… அங்கே என்னோட ரூம்லயே தங்கிப் படிச்சுக்கிறேன்” என்றாள்
“அதுவும் சரிதான்… அடுத்த ஸ்டடி லீவுக்குள்ள ஊட்டில ஒரு எஸ்டேட் வாங்கி வச்சிடுறேன் பாப்பா… நம்ம இடத்துலயே நீ தங்கலாம்” என்றார் நல்லு…
சிறு கர்வச் சிரிப்புடன் நிமிர்ந்தவள்… “குட்…. அதை மொதல்ல செய்ங்க” என்றுவிட்டு “ஆமா ஏதோ பேசனும்னு சொன்னீங்களே டாடி?” என கேட்க…
தீக்குள் ஒரு தவம் – அத்தியாயம் – 10
ஷிமேலுடன் (அலி) என் உறவு!! –Shemale tamil sex story
எனக்கே இந்த மேட்டர்லாம் அக்கா சொல்லி தான் தெரியும்
நண்பனின் மனைவி எனக்கும் மனைவி
எல்லாம் உங்க பூளின் மகிமைதான் - tamil desi story
ரயில் அனுபவம் - Tamil Gay Sex Story (வாசகர் கதைகள்)
பக்கத்து வீட்டு மீனா அக்க
ஆண்ட்யை உஷார் செய்யச் சென்று இறுதியில் அழகான கேரளா பெண் மாட்டிக்கொண்டாள்
கனவு கன்னி சுந்தரி - Tamil Aunty sex stories | Dirtytamil Kamakathai
வழக்கம் போல - Kanavan Manaivi Bisex Story
துணை நடிகையின் மகன் - 7 - Page 4 of 6
anni konjam poruththukkanga - anni Kamakathaikal
கணவன் போட்ட கோட்டில் மனைவி போட்ட ரோடு 11