Tamil Cinema Sex Story | “கிரிஜா இப்ப குளிக்கறாங்க” என்று திரைக்கதாசிரியர் சிங்காரவேல் சொன்னபோது நான் கதிகலங்கிதான் போனேன்!
காரணம் மனோஜாகிய நான் அமெரிக்காவில் இருந்து கோடம்பாக்கம் கலைச்சேவை செய்ய வந்தவன். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸில் ப்ஸினஸ் செய்து கோடிகளை குவித்து சென்னைக்கு “கலைச்சேவை” செய்ய வந்தவன்! என் வயது 35. அது என்னவோ தெரியவில்லை என் சிறிய வயதில் இருந்து திரைப்படம் என்றால் எனக்கு உயிர்! சின்ன வயதில் என் சினிமா ஆசையை அப்பாவுக்கு சொல்ல, அவர் துடைப்பம் எடுத்துக்கொண்டு என்னை தெருத்தெருவாக துரத்தியதில், என் ஆசையை தற்காலிகமாக துறந்தேன். பின் படித்து அமெரிக்கா போய் ப்ஸினஸ் செய்து கோடிகளை சம்பாதித்து இருக்கும்போதுதான் திடீரென்று எனக்கு இந்த ஆசை மீண்டும் துளிர்த்தது. துளிர்த்த ஆசையை நிறைவேற்ற சென்னைக்கு வந்திறங்கினேன்.
சென்னை கோலிவுட்! சினிமா ஆசையை நான் சொன்னபோது எல்லாரும் சுட்டிக்காட்டிய கலைமாமணிதான் டைரக்டர் சக்திவேல். இவர் தற்போதைய கோலிவுட்டின் பிரபல டைரக்டர்! சிங்காரம் தமிழகத்தின் நம்பர் ஒன் திரை கதாசிரியர்!
டைரக்டர் சக்திவேலை சினிமா டைரக்டர் என்பதை விட “ஜு மாஸ்டர்” என்று சொல்வது சால சிறந்தது – காரணம் இவர் மனிதர்களை நம்பி படம் எடுத்ததை விட விலங்குகளை நம்பி இவர் படம் டைரக்ட் செய்தது அதிகம்! பெரும்பாலும் குரங்கு, நாய் இவைகள்தான் இவர் படத்தின் கதாநாயகர்கள். காரணம் கால்ஷீட் ப்ராப்ளம் லேது என்பது இவர் கருத்து! இவர் படத்தில் குரங்கு டான்ஸ் ஆடும் – நாய் பால் வாங்கி வரும். ஏன் இவர் சமீப படத்தில் பாம்பு நாயகிக்கு பிரசவமே பார்த்திருக்கிறது.
சிங்காரம் தமிழ் பட உலகின் ட்ரெண்ட் தெரிந்த கதாசிரியர்! இவர் கதை எழுதினால் படம் நிச்சயம் ஜூப்ளி ஹிட்! இவர் படத்தில் நிச்சயம் ஒரு அம்மன் பாட்டு உண்டு! தலை விரித்தாடும் பெண்கள் நிச்சயம் உண்டு. அதனால் எல்லா தியேட்டரில் நிச்சயமாக வேப்பிலை , குங்குமம் இலவசமாக கிடைக்கும்!
சற்று தயக்கத்துடனே நான் இவர்களை அணுகினேன்.
ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அவர்களுக்கு “மூடு” வர அறை போட்டேன். “மூடை” அதிகரிக்க அறை முழுதும் விஸ்கி, பிரியாணி மற்றும் போண்டா/ பஜ்ஜி வாங்கி பரப்பினேன்.
பின் நான் எடுக்க போகும் படத்திற்காக கதை கேட்டபோது வந்ததுதான் இந்த பதில்
“கிரிஜா குளிக்கறாங்க”. நான் சற்று ஆடி போனது உண்மை! காரணம் நான் எடுக்க விரும்பிய படம் வரதட்சணை போல ஏதாவது சோஷ்யல் தீம் வைத்து இருக்க வேண்டும் என்று விரும்பியதுதான்!
“சார்! நான் வரதட்சணை வைச்சு ஒரு சமூக பிரச்சனை எடுக்கலாம்னு இருக்கேன்!” என்றேன் தயங்கிக்கொண்டே!
“எந்த கழுதையா இருந்தா என்ன! முதல் ஸீனில் கிரிஜா குளிக்கக்கூடாதா என்ன?” என்று கேட்டபோது அது உண்மையாகத்தான் பட்டது. உண்மைதான் ஏன் கிரிஜா படத்தில் குளிக்கக்கூடாதா என்ன!
“ஆனா அதுக்கும் வரதட்சணை கதைக்கும் என்ன சார் சம்பந்தம்!” என்று இழுத்தேன்…
“ஏன் கிரிஜாக்கு வரதட்சனை பிரச்சனை வரக்கூடாதா?” என்று ஆரம்பித்தார் சிங்காரம்…
ஆம் முதல் சினிமாவின் பாலப்பாடம். ஆமாம் சினிமாக்கு கதை முக்கியமல்ல! இந்த கர்மம் பிடிச்ச சினிமாவுக்கு எதுவும் தேவையில்லை என்று அப்போதுதான் புரிந்தது. சுற்றி பார்த்தேன். எல்லாம் விஸ்கி பாட்டில். பல பாட்டில்கள் ஓப்பனாக இருந்தது. ரூமில் ஆங்காங்கே சிக்கன், மட்டன் தரையில் சிதறி இருந்தது – கதை டிஸ்கஷனாம்!
“உண்மைதான் சார்!” என்று தலையாட்டினேன்.
உடனே சிங்காரம் தன் கதை அருமையை சொல்ல ஆரம்பித்தார்.
“ஸார்! உங்களுக்கு தமிழ் படத்தை பற்றி என்ன சந்தேகம் இருந்தாலும் என் கிட்டே கேளுங்க” என்றார்.
நான் தருமி ஸ்டைலில் கேட்க ஆரம்பித்தேன்.
“ஹீரோ தமிழ் சினிமாவில் எப்படி சார் இருக்கணும்” என்றேன்
“ஹீரோ போலீஸா இருக்கணும். இல்ல ஹீரோயின் அப்பா போலீஸா இருக்கணும். இல்லேன்னா ஹீரோ திருடனா இருக்கணும்”
“அப்போ ஹீரோயின்”
“நிச்சயம் ஹீரோயின் ஒன்னு திமிர் பிடிச்சவளா இருக்கணும். புடவையை தவிர மத்த எல்ல ட்ரெஸ்ஸும் போடணும். ஆனா கடைசியிலே ஹீரோ கால்லே விழுந்து மன்னிப்பு கேட்கணும்! ஆனா ரெண்டு ஹீரோயின் இருந்தா”
“இருந்தா” என்றேன் பிரமிப்புடன்
“ஒருத்தி வில்லன் குண்டுக்கோ, கத்திக்கோ க்ளைமாக்ஸ்-லே இரையாகணும். இல்ல வெளிநாட்டுக்கு போயிடணும். இல்லேன்னா சாமியாரா/துறவியா/ கன்னியாஸ்திரீயா போயிடணும்”
“அப்புறம்” என்றேன் பிரமிப்புடன்
“ஹீரோக்கு தங்கச்சி இருந்தா படம் ஆரம்பிச்சு 15 நிமிஷத்துலே கெட்டு போகணும். இல்லை வில்லனை தான் லவ் பண்ணனும். அப்புறம் எம்புருசன் என்னை அடிப்பார்..உதைப்பார்.. நீ யார் கேட்க? என்று கொட்டங்கச்சி பாட்டுக்கு லீட் கொடுக்கணும்”
“ஸார் காமெடி” என்று இழுத்தேன்…
“அது இல்லாமலா காமெடியன்னு ஒருத்தன் இருந்தா ஒன்னு அடி வாங்கணும். இல்ல அடி கொடுக்கணும். இல்லேன்னா தத்துவமோ, மூடநம்பிக்கை ஒழிப்பு பிரசாரமோ செய்யணும்”
எனக்கு புல்லரித்தது! ச்சே! தமிழ் சினிமா இவ்வளவு ஸிம்புளா?
“ம் அப்புறம்”
“அப்புறம் என்ன ஸார் அப்புறம் அப்புறம்…சில டையலாக் நிச்சயம் போடனும் – உங்களோட இந்த உதவியை நான் எப்பவும் மறக்கமாட்டேன். ரொம்ப நன்றிங்க. ஆங்..உங்களோட பேரு? மயக்கத்திலிருந்து எழுந்த ஹீரோ (அ) ஹீரோயின் சொல்லும் முதல் வார்த்தை நான் இப்போ எங்கே இருக்கேன்.?இன்ஸ்பெக்டரா இருந்தா அரஸ்ட் ஹிம். கடவுளே இதுவரை நான் உங்கிட்ட எதுவும் கேட்டதில்ல. இப்போ கேட்கிறேன். உன் ஆள்ககிட்ட இருக்க துப்பாக்கிய எல்லாம் கீழ போடச் சொல்லு.உங்கள நினைச்ச இந்த மனசால வேற ஒருத்தற நினைச்சுக்கூட பார்க்க முடியாது அப்புறம் என் வயித்துல வளர்ற உங்க குழந்தைக்கு முதல பதில் சொல்லுங்க.”
உண்மையிலேயே எனக்கு புல்லரித்தது. சினிமாவே இவ்வளவுதானா?
“என்ன ஸார் புல்லரிச்சி போய் நிக்கறீங்க! நம்ம பட கதை ரொம்ப ஸிம்புள் சார்! கிரிஜா அப்பாவிற்கு வரதட்சனை கொடுக்கமுடியல! காரணம் அவ அப்பாவுக்கு 8 பெண்கள்”
“சார் நீங்கதானே இப்ப ஹீரோயின் என்றால் பணக்காரியா இருக்கணும்னு சொன்னீங்க”
“அப்படியா! அப்போ மாத்திடலாம். ஹீரோயின் பஞ்ச பனாதை”
ஒரு வினாடியில் ஹீரோயின் பணக்காரியில் இருந்து பஞ்ச பனாதையானாள். நான் சற்றே நிஜ லோகத்திற்கு வந்தேன்
“ஏன் சார்! இந்த காலத்திலே யாருக்கு சார் 8 பெண்கள் இருக்கு!”
“சார்! அப்பதான் சினிமா பார்க்க பெண்கள் வருவாங்க! ஒரு சிம்பதி வேணாமா?”
சிங்கார்ம் சொல்வது சரிதான்!
“அப்புறம்” என்றேன்.
“அப்புறம் ஒரு குத்தாட்டம். அந்த 8 பெண்களையும் குத்தாட்டம் ஆட வைக்கலாம்! டைரக்டர் ஸார்! எல்லாருக்கும் குட்ட பாவாடை ரெடி பண்ணிடுங்க! என்ன அப்பதான் நம்ம ஹீரோ அறிமுகம் ஆவறார்!”
“ம்” என்றேன் பரிதாபமாக
“இங்கதான் ஒரு பிரச்சனை – ஏதாவது ஒரு பஞ்ச் டயலாக் வைக்கணும். ஹீரோ என்ன பஞ்ச் டயலாக் சொல்லணும்னு பத்திரிகையிலே ஒரு போட்டி வைச்சிடலாம்! ஜெயிச்சவனுக்கு 10 சவரன் பொன்! என்ன சொல்றீங்க!” என்றான் சிங்காரம்.
“ஸூப்பர் ஐடியா சிங்காரம்” என்று தலையாட்டினார் சக்திவேல்!
“ம்” என்றேன் நான் பரிதாபமாக!
“என்ன சார் சோகமா இருக்கீங்க! சந்தோஷமா இருங்க! நாம் ஒரு ஜூப்லி படம் எடுக்கறோம்ல!” என்று உற்சாகத்துடன் சிங்காரத்தை தட்டினார்.
சிங்காரம் தொடர்ந்தார் “”தரேன் தட்சனை ஆனா கொடுக்க மாட்டேன் வரதட்சனை! எப்படியிருக்கு!”
“கர்மம் தாங்கல! ஏன் பஞ்ச டயலாக் இல்லைனா ஹீரோ வரமாட்டாரா?” என்றேன் நான் என் தலையை தட்டிக்கொண்டே!
சினிமா தயாரிக்கலாம் வாங்க!
கயலின் ஹாஸ்டல் அனுபவம் - Tamil Lesbian Story
ஜிஞ்சர் மங்க்கி எனர்ஜி டிரிங்க்
ஷீலாவுடன் லிப்டில்!! காமக்கதை - Office Tamil sex story
மாறனின் மயக்கத்தில் ராதா-2 - Page 2 of 3
அன்புள்ள அண்ணி கொடுத்து வைத்த என் சுண்ணி | 02
அபிநயா - என் நண்பனின் அழகு மனைவி - Page 5 of 5
அய்யோ .. டேய்… மெதுவாடா
குலுங்கித் தளும்பும் கொங்கை கொண்ட மங்கை என் தங்கை – 06
சித்தியுடன் சித்து விளையாட்டு - 4
அக்கா தங்கை நடிகைகள் காம கூத்து
வீட்டில் நடந்த கூத்து - 1
பென்கூதி வாடகைக்கு விடப்படும் Ch. 02