எபிஸோட் – IV
ஏன் யாருமே என்னை புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்..? ஏன் எல்லோருமே என் உணர்சிகளை சீண்டி விளையாடுகிறார்கள்..? காலம் பிரிக்கப் போவது தெரியாமல், கட்டிய மனைவி மீது கொள்ளை கொள்ளையாய் காதல் வைத்தது தவறா..? அந்த காதல் மனைவியை கோர விபத்தில் இழந்துவிட்டு, அவளுடைய நினைவுகளில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறேனே.. அது தவறா..? இந்த ஜென்மத்தில்.. இதய வீட்டில்.. அவளுக்கு மட்டுமே இடம் என்று வாழ முடிவு செய்ததில் ஏதேனும் தவறு கண்பீர்களா..? இதில் எது எனது தவறு..?? ஆனால்.. மலர், பன்னீர்.. அந்த முகுந்த் முதற்கொண்டு.. என் மீதுதான் ஏதோ தவறு என்பது போலல்லவா பேசுகிறார்கள்..??
Search | மலரே என்னிடம் மயங்காதேSearch
கயல் என்னை விட்டுச்சென்ற இந்த ஒரு வருட காலத்தில், அவளுடைய நினைவுகளில் நான் வாழ்ந்திருப்பதில் எனக்கு எந்த பிரச்னையும் வரவில்லை. அவளை தவிர என் வாழ்வில் வேறொரு பெண்ணுக்கு இடமில்லை என்ற என் மனவுறுதியிலும் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக நடந்த சம்பவங்கள் என் மனவுறுதியை சற்றே ஆட்டம் காண வைத்திருக்கின்றன என்றே எனக்கு தோன்றிற்று. இதை இப்படியே விடக்கூடாது என்று நினைத்தேன். மலரிடம் பேச வேண்டும்..!!
அன்று மாலை ஆபீசில் இருந்து கிளம்பி பெசன்ட் நகர் பீச் சென்றேன். நிலவு வெளிச்சத்தில் கருநீலமாய் காட்சியளித்த கடலையே வெறித்து பார்த்தபடி, நெடு நேரம் அமர்ந்திருந்தேன். இருண்டுபோன கடற்கரை நோக்கி தவழ்ந்து வந்த வெள்ளி அலைகளையே, அமைதியாக வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தேன். என் மனதுக்குள்ளும் அந்த மாதிரி எண்ணற்ற குழப்ப அலைகள்..!! திரும்ப திரும்ப.. சுழன்று சுழன்று.. மோதி மோதி.. என் அமைதியை அபகரித்துக்கொண்ட குழப்ப அலைகள்..!!
அன்று இரவு வீடு திரும்ப மிகவும் தாமதாமாகி விட்டது. பதினோரு மணியை நெருங்கியிருந்தது. பன்னீரும் அபியும் தூங்கியிருந்தார்கள். மலர்தான் வந்து கதவு திறந்து விட்டாள். ஒருமாதிரி சலனமில்லாமல் என் கண்களையே கூர்மையாக பார்த்தாள். என்னால் நெடுநேரம் அவளுடைய பார்வையை தாங்க முடியவில்லை. கடந்து உள்ளே சென்றேன். என்னுடைய அறைக்குள் புகுந்து கொண்டேன். வேறு உடைக்கு மாறி, படுக்கையில் விழுந்தேன். கொஞ்ச நேரம் கழித்து கதவருகே மலரின் குரல்.
“சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன்.. வாங்க..”
“எ..எனக்கு பசிக்கல..” நான் அவளை ஏறிட்டு மெல்லிய குரலில் சொன்னேன்.
“ஏன்..?”
“பசிக்கலன்னா விடேன்..” நாம் சலிப்பாய் சொல்ல, மலர் இப்போது சீறினாள்.
“இப்டிலாம் பண்ணாதீங்கத்தான்.. என் மேல எதுவும் கோவம்னா.. என்னை நாலு அறை அறைஞ்சிடுங்க..!!”
“எனக்கு யார் மேலயும் கோவம் இல்ல..”
“அப்புறம் சாப்பாட்டு மேல மட்டும் என்ன கோவம்..?”
“ப்ச்..!! பசிக்கல மலர்..”
“பொய் சொல்லாதீங்க.. காலைலயும் சாப்பிடலை.. மதியமும் சாப்பிடலைன்னு அப்பா சொன்னார்.. இப்பவும் பசியில்லைன்னா என்ன அர்த்தம்..??”
“சாப்பிட பிடிக்கலைன்னு அர்த்தம்..!! எ..எனக்கு.. எனக்கு தலை வலிக்கிற மாதிரி இருக்கு மலர்.. கொஞ்ச நேரம் என்னை நிம்மதியா தூங்க விடுறியா..? ப்ளீஸ்..!!”
“ஓ..!! நான்தான் உங்க நிம்மதியைலாம் கெடுக்குறேன்ல..?”
“……………………..”
“சரி..!! இதையும் கேட்டுக்குங்க.. நானும் நேத்துல இருந்து ஒன்னும் சாப்பிடலை.. நீங்க சாப்பிடுற வரைக்கும் நானும் சாப்பிடறதா இல்ல..!! இப்போ வந்தீங்கன்னா.. ரெண்டு பேரும் ஒண்ணா சாப்பிட்டு நம்ம விரதத்தை முடிச்சுக்கலாம்..!! அதுக்கப்புறம் நான் இங்க வந்து நின்னு.. உங்க நிம்மதியை கெடுக்க மாட்டேன்.. விடியிற வரை நல்லா தூங்குங்க..!!”
நான் அதற்கும் அமைதியாக இருக்க, மலர் இப்போது சற்றே கோபமாய் கத்தினாள்.
“நான் சொல்றதுக்கு பதில் கூட சொல்ல மாட்டீங்களா..?? அவ்ளோ கோவமா என் மேல..??? சரி..!! நான் டைனிங் டேபிள்ல வெயிட் பண்ணுறேன்.. உங்களுக்கு எப்போ சாப்பிடனும்னு தோணுதோ.. அப்போ வாங்க..!! நீங்க வர்ற வரைக்கும் நான் அந்த எடத்தை விட்டு அசைய மாட்டேன்..!!”
படபடவென சொன்ன மலர், என் பதிலுக்காக காத்திராமல் திரும்பி நடந்தாள். டைனிங் டேபிளை அடைந்து, சேரை இழுத்து போட்டு அமர்ந்தாள். முழங்கைகளை டேபிளில் ஊன்றி, இரண்டு கையாளும் தன் கன்னங்களை தாங்கி பிடித்துக் கொண்டாள். எதிரே இருந்த சுவரையே ஒருமாதிரி நிலை குத்திப் போன பார்வை பார்க்கலானாள்.
எனக்கு இப்போது நிஜமாகவே தலை வலி வரும் போல் ஆனது..!! ப்ச்..!! ஏன் இப்படி செய்கிறாள் இவள்..?? எவ்வளவு பிரியம் வைத்திருந்தேன் இவள் மேல்..?? எரிச்சலுற செய்கிறாளே இப்போது..?? அவள் சொன்ன மாதிரி, கன்னத்தை சேர்த்து நான்கு அறை விடலாமா என்று கூட தோன்றுகிறது..!! அப்படி என்ன கண்டு தொலைத்தாள் என்னிடம்.. இந்த அறிவு கெட்டவள்..??நான் ஒரு நான்கைந்து நிமிடங்கள் பெட்ரூமில் இருந்தபடி, தூரத்தில் அமர்ந்திருந்த மலரையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் இம்மி கூட அசைவது மாதிரி தெரியவில்லை. அழுத்தக்காரி.. பிடிவாதக்காரி.. ராட்சசி..!! எனக்கு அதன் பிறகும் அமைதியாய் இருக்க பிடிக்கவில்லை. எரிச்சலாய் ஒரு பெருமூச்சு விட்டவாறே படுக்கையில் இருந்து எழுந்தேன். விறுவிறுவென நடந்து சென்று, மலருக்கு அருகில் கிடந்த சேரை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தேன்.
நான் சாப்பிட வந்தமர்ந்ததற்கு மலர் எந்த வித உணர்ச்சியுமே காட்டவில்லை. நான் நிச்சயமாய் வருவேன் என்று முன்கூட்டியே அவளுக்கு தெரியும் என்பது மாதிரிதான் நடந்து கொண்டாள். என் முகத்தை திரும்பி கூட பாராமலே எழுந்து கொண்டவள், ப்ளேட் எடுத்து எனக்கு முன்பாக வைத்தாள். ஆறிப் போன சாதத்தை அள்ளி ப்ளேட்டில் போட்டாள். ஆவி பறக்கும் சாம்பாரை மேலே ஊற்றினாள். அப்பளத்தை ஒரு சின்ன தட்டில் வைத்து, எனக்கு முன் தள்ளி விட்டாள்.
“நீ சாப்பிடலையா..??” நான் சாதத்தில் கை வைக்க போவதற்கு முன்பாக கேட்டேன்.
மலரே என்னிடம் மயங்காதே – 5,
“நீங்க சாப்பிட்டப்புறம் சாப்பிடுறேன்..” அவள் இறுக்கமான குரலில் சொன்னாள்.
நான் இப்போது திரும்பி, அவளை ஒரு நம்பிக்கையில்லாத பார்வை பார்க்க, அவள் அந்தப் பார்வையின் அர்த்தத்தை பட்டென புரிந்து கொண்டாள். சலிப்பும் கிண்டலும் சரிவிகிதத்தில் கலந்த குரலில் சொன்னாள்.
“ப்ச்.. நான் ஒன்னும் உங்களை மாதிரி.. சின்னப்புள்ளத்தனமா அடம் புடிக்க மாட்டேன்..!! நீங்க சாப்பிடுங்க.. கண்டிப்பா நான் சாப்பிடுறேன்..!!”
அப்புறம் நான் எதுவும் பேசவில்லை. அமைதியாக சாப்பிட ஆரம்பித்தேன். ‘பசிக்கல.. சாப்பிட பிடிக்கல..’ என்று என் வாய்தான் வக்கனையாக சொன்னதே தவிர, வயிறு பசியில் காய்ந்து போய்தான் கிடந்தது. எதைத் தின்று ஏப்பம் விடலாம் என்ற எதிர்பார்ப்போடுதான் இருந்தது. கொஞ்ச நேரம் வெட்கத்தையும், வீராப்பையும் மறந்து, வேக வேகமாய் சாப்பாட்டை அள்ளி விழுங்கினேன். மலரின் கைமணம், பசி இல்லாதவனுக்கும் கூட பசியை தூண்டிவிடும்..!! நானோ அகோர பசியில் இருந்தேன்.. எப்படி சாப்பிட்டிருப்பேன் என்று எண்ணிப் பாருங்கள்..!! பாதி சாதம் காலியான போதுதான், எதேச்சையாக திரும்பி மலரை பார்த்தேன். சற்றே அதிர்ந்து போனேன்.
அவள் நான் சாப்பிடுவதையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். பசி தந்த வேகத்தில், நான் அவசர கதியில் சாப்பிடுவதையே பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய கண்களில் இருந்து நீர் வடிந்து கொண்டிருந்தது. இப்போது நான் அவள் பக்கம் திரும்பியதும், பட்டென கண்ணீரை துடைத்துக் கொண்டாள். எதுவுமே நடவாதவள் போல இயல்பான குரலில்,
“ரசம் கொஞ்சம் போட்டுக்குங்கத்தான்..”
என்றவாறு ஒரு கரண்டியில் ரசம் அள்ளி, சாதத்தில் ஊற்றினாள். பின்பு வேறுபக்கமாய் திரும்பி, மூக்கை உறிஞ்சிக் கொண்டாள். நான் இப்போது அவளுக்காக சற்றே உருகிப் போனேன். ‘என் மீது இவள் எக்கச்சக்க அன்பு வைத்திருக்கிறாள்.. அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.. ஏற்றுக் கொள்ளவோ எனக்கு மனமில்லை..!! என்னதான் முடிவு இதற்கு..??’ அதே யோசனையுடன் கொஞ்ச நேரம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், அப்புறம் சாதத்தை பிசைந்து சாப்பிட ஆரம்பித்தேன். ஓரிரு நிமிடங்களில்.. நான் சாப்பிட்டு முடிக்கப் போகும் வேளையில்.. மலர் மெல்லிய குரலில் சொன்னாள்.“ஸாரித்தான்..!!”
“ஸாரியா..? எதுக்கு..??” நான் புரியாமல் அவளை ஏறிட்டேன்.
“நேத்து நான் அப்படி நடந்துக்கிட்டதுக்கு..”
“ஓ..!!”
“அவங்க முன்னாடி நிக்கிறது.. எனக்கு அன்ஈசியா இருக்குமேன்னுதான் நான் நெனச்சேனே ஒழிய.. நான் நடந்துக்கிட விதத்தால.. உங்களுக்கு எவ்வளவு அவமானமா இருக்கும்னு நான் நெனச்சு பாக்கலை..!!! தப்பு பண்ணிட்டேன்.. என்னை மன்னிச்சுடுங்கத்தான்..!!”
“ப..பரவால விடு..”
“இ..இனிமே.. இனிமே நீங்க தலை குனியிற மாதிரி ஒரு காரியத்தை.. ச..சத்தியமா நான் பண்ண மாட்டேன்..!! சத்தியமா..!!!!” அவள் குரல் தழதழக்க சொல்ல, எனக்கு இப்போது அவள் மீது பட்டென ஒரு பரிதாபம் வந்தது.
“ஹேய்.. இப்போ எதுக்கு அதை இவ்வளவு சீரியஸா எடுத்துக்கிட்டு பேசுற..? நான்தான் ‘பரவால.. நான் எதுவும் நெனைக்கலை..’ ன்னு சொல்றேன்ல..? விடு..!!”
நான் இலகுவான குரலில் அப்படி சொன்னதும், மலர் சற்றே சமாதானம் ஆனாள். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தாள். அப்புறம் தொண்டையை செருமிக்கொண்டு, சகஜமான குரலில் பேச ஆரம்பித்தாள்.
“உங்ககிட்ட இன்னொன்னு கேக்கணும்..”
“என்ன..?”
“ந..நடந்ததுலாம் மனசுல வச்சுக்காம.. நீங்க எப்போவும் போல எங்கிட்ட பேசணும்..!! ரெண்டு நாளா.. என்னை பாக்குறப்போலாம் ஒருமாதிரி எரிச்சலாத்தான் பாக்குறீங்க.. முறைக்கிறீங்க.. எனக்கு அது பிடிக்கலைத்தான்.. நீங்க அப்படி எரிச்சலா என்னை பாக்குறது.. எ..என்னால தாங்கிக்க முடியலை..!!”
“…………….”
“என் காதலை என் மனசுக்குள்ளயே போட்டு பூட்டிடனும்னுதான் நான் நெனச்சிருந்தேன்.. சொன்னா நீங்க கஷ்டப்படுவீங்கன்னு எனக்கு தெரியும்..!! ஆனா.. அந்த சூழ்நிலைல.. எ..எனக்கு சொல்றதை தவிர வேற வழி தெரியலை..!!”“…………….”
“என் காதலை ஏத்துக்க சொல்லி.. எந்த வகைலையும் இனிமே நான் உங்களை தொந்தரவு பண்ண மாட்டேன்..!! என் பார்வையிலையோ, வார்த்தையிலேயோ கூட.. என் காதலை காட்ட மாட்டேன்..!! என் கூட எப்போவும் போல பேசுங்கத்தான்.. ப்ளீஸ்..!!”
அவள் உருக்கமாக சொல்ல, நான் அமைதியாக அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். ‘எனக்காக எவ்வளவு ஏங்குகிறாள் இவள்..??’ என்று தோன்றியது. ஆனால்.. அந்த நினைவே இன்னொரு பக்கம் கவலையாகவும் இருந்தது..!! அவளும் நான் என்ன சொல்லப் போகிறேன் என்று தெரிந்து கொள்வதற்காக, என் முகத்தையே ஒரு மாதிரி பயமும், எதிர்பார்ப்புமாய் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் ஓரிரு வினாடிகள்தான் யோசித்திருப்பேன். அப்புறம் மெல்ல அவளை பார்த்து நான் புன்னகைக்கவும், இப்போது அவளது தடித்து சிவந்த உதடுகளும்.. தாராளமாய் புன்னகையை பூசிக்கொண்டன..!!
“தேங்க்ஸ்த்தான்..!!” என்றாள் கண்களில் நன்றி மின்ன.
“இட்ஸ் ஓகே..!! ம்ம்ம்ம்ம்ம்… சரி.. டைமாச்சு.. நீயும் சாப்பிட்டு தூங்கு..!!”
“ம்ம்… சரித்தான்..!!”
உற்சாகமாக சொன்னவள், நான் சாப்பிட்டு முடித்த தட்டையே தன் பக்கம் இழுத்து, அதில் சாதத்தை போட்டுக் கொண்டாள். அதைப் பார்த்து லேசாக தடுமாறிய நான், ஏதோ சொல்ல நினைத்தேன். அப்புறம், பசியில் இருப்பவளை எதுவும் சொல்லி, சாப்பிடாமல் செய்து விட வேண்டாம் என்று எண்ணி, அப்படியே விட்டு விட்டேன். எழுந்து கை கழுவிக்கொண்டு, என் அறைக்குள் நுழைந்தேன். மெத்தையில் வீழ்ந்து சிந்தனையில் ஆழ்ந்தேன்.
மலரே என்னிடம் மயங்காதே – 4
கிராமத்துக் காதல்
அக்கா புருசன் பண்ணிய லீலை - Page 4 of 4 - Akka Purusan Otha Kama kathai
கேங்பேங் உடன் ஒரு குழந்தை வேண்டும் 2
Vuthavi Ketavanitam En Manaiviyai Parikotuthen Tamil Ool Kathai | Swathi
பேராசிரியையோடு பேரானந்தம்
lesbian sex stories in tamil - Lesbian Thozhi Muthal Kadhalan varai Kamakathai
அக்கா! நான் தயார்! - Akka Thambi Incest Tamil Kamakathaikal
என் மனைவி, பலமுறை என் நண்பனிடம் படுத்து இருக்கின்றாளா? - மனைவின் கள்ளக்காதல்
Bus Fun - Tamil homo sex kathaikal
ஆசை 14 - 2 pengal kamakathaikal - Page 3 of 5
முடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 13
ஊட்டியில் சுதாவுடன்