‘இங்கே பாருங்கள். சாப்பாட்டை மறந்து விட்டுவிட்டுப் போகிறீர்களே!’ என்று கதவுவரை சென்றுவிட்ட கணவனிடம் ஓடிச்சென்று கொடுத்தாள் மனைவி. தினமும் வீட்டிலிருந்துதான் அவன் உணவு எடுத்துச்செல்வது வழக்கம். அவனலுவலகத்தில் பலர் உணவுவிடுதிகளில் மதியவுணவுகொள்ளும் பழக்கமுடையவர்கள். ஆனால் அவன் தன் மனைவியின் சமையலையே விரும்பினான்.